ஊடலும்… கூடலும்….

April 24th, 2008 by tamizbalan

                                                

                                                 

         பரந்து விரிந்திருக்கும் வானம்-அதில்
         ஒளி தரும் சூரியன் - அதற்கு
         திரையிடும் மேகம்-இவற்றின்
         ஊடலில் சிந்தியது விண்ணீர்
         வீட்டுச்சிறையில் இருக்கும்
         மனிதருக்காக அல்ல….
         சுதந்திர தோட்டத்தில் காத்துக்
         கிடக்கும் உயிருக்காக- இதனால்
         சுதந்திர தோட்டத்தில் கிடந்த உயிர்கள்
         கொண்டது இச்சை
         பிறந்தது பச்சை.            

மறைவுகள்

April 24th, 2008 by tamizbalan

            

                

    

     சுமக்கும் சுவருக்கே
                                    தெரியாது…!
     தன்மீது இருப்பது
    அழகான ஓவியமென்று…..
          
     நிற்கின்ற கல்லுக்கே
                             தெரியாது…!

     தன்னுள் இருப்பது
     கண்கவர் சிலையென்று.
                

     ஆற்றில் நீந்தும் மீனுக்கே
                                      தெரியாது…!

     தான் இருப்பது
     புனித நதி என்று…..    

     எழுதும் கோலுக்கே
                          தெரியாது….!
     தான் எழுதுவது மிகப்
     பெரும் சிந்தனையென்று.

     அதுபோலத்தான்…..!

     புதுமைகள் புதைந்திருக்கும்
     உனக்கே தெரியாது…

     வெளிவரப்போவது மிகப்பெரும்
     சாதனையென்று….!

 

                            

காதலி

April 16th, 2008 by tamizbalan

                                       

       சில்லென இருண்டது மாலை- 

                                                        என்னவளின்       

       நினைவுகள் தாங்கிய  வேளை      

       சிட்டென கூவியது தொலைபேசிக்குயில்
       சட்டென எடுத்து காதில் வைத்தேன்-அதில்
       பட்டென கேட்டது.
       தூரதேசத்தில் வசிக்கும் - என்னவளின்
       முத்தக்கவிதை.  

              

பழமொழிகள்

April 16th, 2008 by tamizbalan

             

 பழமொழிகள் பல உண்டு - அதிலே
சிலமொழிகள் இங்குண்டு.
ஆசைகள் பல உண்டு-இதிலே
புத்தனும் தோற்றதுண்டு.
ஆசையே துன்பத்திற்கு காரணம்
என்றான் அவன்.
மானுடம் ஆசையை கைவிட
ஆசை கொண்டான்.
அவனின் ஆசையே  நிராசையாகி
மண்ணாசை,பெண்ணாசை,பொன்னசையாய்
விண்ணுயரும் ஆசையாய்
அசைபோடுகிறது.

முருகா! முருகா!

April 10th, 2008 by tamizbalan

    Visvaroopam 

     மூவிரு முகங்கள் போற்றி…
      அழகின் உருவே போற்றி…
      மாசற்ற பதமே போற்றி…
      சேவற்கொடியே போற்றி…
      பன்னிரு கையே போற்றி…
      தமிழ்செங்கோவே போற்றி…
      சக்தி உமைபாலனே போற்றி…