என் தமிழ்

உலகை ஆளும் சிவனே‍- நீ
எந்தன் தமிழுக்கு பின்னே.
உடன் பிறந்த மொழிகளேல்லாம்
மறைந்திட்ட போதிலும்-தமிழ்
தனித்தன்மையுடன் விளங்குகிறது
இது நாள் வரையிலும்.

தமிழில்லா இடமில்லை பாரில்-தமிழ்
மூச்சிலும் இருக்கும் நமது ஊரில்.
வள்ளுவன் கண்ட இன்பத்துப்பால்-அதனினும்
மேல் எனது தமிழ்பால்.

மூன்றேழுத்து மந்திரத்தை கூறு
இறைவா! என்றேன்.
கண்ணிமைக்கும் நொடியில் தமிழ் என்றோன்
அவன்! அப்பொழுதென்றால்
உனது நாமம் என்று கேட்டேன்?
நானே தமிழ்!
தமிழே நான்!
என்றான் அவன்.

Leave a Reply