Archive for September, 2008

என் தமிழ்

Thursday, September 25th, 2008

உலகை ஆளும் சிவனே‍- நீ
எந்தன் தமிழுக்கு பின்னே.
உடன் பிறந்த மொழிகளேல்லாம்
மறைந்திட்ட போதிலும்-தமிழ்
தனித்தன்மையுடன் விளங்குகிறது
இது நாள் வரையிலும்.

தமிழில்லா இடமில்லை பாரில்-தமிழ்
மூச்சிலும் இருக்கும் நமது ஊரில்.
வள்ளுவன் கண்ட இன்பத்துப்பால்-அதனினும்
மேல் எனது தமிழ்பால்.

மூன்றேழுத்து மந்திரத்தை கூறு
இறைவா! என்றேன்.
கண்ணிமைக்கும் நொடியில் தமிழ் என்றோன்
அவன்! அப்பொழுதென்றால்
உனது நாமம் என்று கேட்டேன்?
நானே தமிழ்!
தமிழே நான்!
என்றான் அவன்.

எங்கெங்கு காணிணும்

Thursday, September 25th, 2008

              

எங்கெங்கு காணிணும் தமிழ்
நெஞ்சமுண்டு-அந்த‌
நெஞ்சத்திலே மனிதம் என்றும்
சிறப்பதுண்டு…

தமிழனின் ம‌னிதம் பார்த்தேன்
சுனாமியில்.

அந்த சுனாமியில் எங்கெங்கு காணிணும்
ஓலக்குரல்களே…
அந்த ஓலக்குரலிலே சிக்கியவன்
குமரியிலே….
அதை கண்டு மனம் வெம்பித்
துடித்தவன் இமயத்திலே…
துடித்தவனின் நெஞ்சிலே
உதிர்த்தது மனிதநேயம்…

அதனால் பேரலையின் காயங்கள்
எல்லாம் மாயம்…
எனவே தமிழும் தமிழ்நாடும் தெய்வீகம்
அங்கே சிறந்து விள‌ங்குவது ஆன்மீகம்…
ஆம்! எங்கெங்கு காணிணும் தமிழ்
நெஞ்சமுண்டு….
அந்த நெஞ்சத்திலே தமிழுக்கென்றும்
ஓரிடமுண்டு…..