சென்னை

       

                                    

     இமயங்களின் வரிசையாய்
     ஒளியைத்தரும் இரவுச் சூரியன்கள்
     இவைகளின் பார்வையில்….
     சிராயமைந்த சாலை-கண்ணசைத்தால்
     நொடியில் ஊற்றிடும் பாலை.
     வாழ வழியின்றி குடிபுகுந்த மனித பொம்மைகள்,
     பொம்மைகளின் பார்வையில் ஏக்கங்களின் கோர்வைகள்
     கோர்வையின் வாழ வழி கிடைக்குமா?-என்ற
     வினாவின் எச்சம்-அதுதான்
     இங்கு மிச்சம்…..   

                  
              

Leave a Reply